Gautam Gambhir said results is important for me [file image]
ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் கிட்டத்தட்ட முதல் பாதி முடிந்த நிலையில், இரண்டாம் பாதி வரும் நாட்களில் நடைபெற இருக்கிறது. இதுவரை அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் (இன்றைய போட்டி உட்பட) விளையாடி உள்ளனர். இதன் மூலம் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் அடுத்தடுத்து நான்கு இடங்களில் உள்ளனர்.
இருப்பினும் வரும் நாட்களில் புள்ளி பட்டியலில் மாற்றம் நிகழலாம். இந்த நிலையில் எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய அணி வீரரான கவுதம் கம்பீர் கொல்கத்தா அணி ஆலோசகராக இந்த சீசன் செயல்பட்டு வருகிறார்.
அதன்படி கொல்கத்தா அணியும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில உள்ளது. நாளை பெங்களூருவுக்கு எதிராக கொல்கத்தா அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த சூழலில் பேட்டி ஒன்றில் கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் கூறியதாவது, என்னை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டிகளிலும் முடிவுகள் தான் முக்கியம் என்பதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். செயல்முறையின் மீதோ, ஒரு செயலை சரியாக செய்தால் அது தானாகவே முடிவுகளை பார்த்துக்கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஏனென்றால் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு பார்க்கத்தான் மக்கள் ஸ்டேடியதுக்கு வருகிறார்கள். இதனால் எனக்கு முடிவு தான் முக்கியம். இதுதான் எனது மனதிலும் இருக்கிறது என தெரிவித்தார். எனவே கவுதம் கம்பீரின் இந்த வெளிப்படையான பேச்சு எம்எஸ் தோனியை தாக்கும் வகையில் இருப்பதாக அவரது ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏனென்றால், எம்எஸ் தோனியின் தாரக மந்திரமே செயல்முறை தான். அதாவது பிராசஸ், ஒரு செயலை சரியாக செய்தால் அது முடிவை பார்த்துக்கொள்ளும் என்று எம்எஸ் தோனி பலமுறை கூறியிருக்கிறார், செய்தும் காட்டியிருக்கிறார். தற்போது இதற்கு மாற்றாக முடிவு தான் எனக்கு முக்கியம் செயல்முறை மீது நம்பிக்கை இல்லை என கம்பீர் கூறி இருப்பது தோனியின் ரசிகர்களை கோவமடைய செய்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…