GTvsSRH: சதம் அடித்து மிரட்டிய சுப்மன் கில்..! ஹைதராபாத் அணிக்கு வலுவான இலக்கு..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரில் இன்றைய GT vs SRH போட்டியில், முதலில் பேட் செய்த குஜராத் அணி 188/9 ரன்கள் குவித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

இதன்படி, குஜராத் அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விருத்திமான் சாஹா ரன்கள் ஏதும் எடுக்காமல் களத்தை விட்டு வெளியேறினார். அவருடன் இணைந்து களமிறங்கிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடினார். அவரையடுத்து, சாய் சுதர்சன் களமிறங்கி கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஒருபுறம் சுப்மன் கில் அதிரடியால் பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். மறுபுறம் அவருக்கு இணையாக விளையாடிய சுதர்சன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர். ஆனால் சுப்மன் கில் 56 பந்துகளில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என சதமடித்து அசத்தினார்.

முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்களும், சாய் சுதர்சன் 47 ரன்களும் குவித்துள்ளனர். ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் தனது சிறப்பான பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

38 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago