நான்காவது டெஸ்ட் போட்டி இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறி விளையாடி வந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்கள் எடுத்தனர்.
இதில் இந்திய அணியில் அக்ஸர் 4, அஸ்வின் 3, சிராஜ் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 365 ரன்கள் எடுத்து 160 ரன்கள் முன்னிலையில் இருந்தனர்.
அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் 101 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 96* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார். இதில் இங்கிலாந்து அணியில், ஜேம்ஸ் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, ஜாக் லீச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சிஸை தொடங்கி விளையாடியது. ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இந்திய அணி பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சில் மிரட்டி வந்தனர். அஸ்வின் தொடர்ந்து முதல் 2 விக்கெட்டை பறித்தார். ஹாட்ரிக் விக்கெட் எடுப்பார் என எதிர்க்கப்பட்ட நிலையில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கவில்லை. இதனால், இங்கிலாந்து அணி பேட்டிங்கில் திணறி வந்தது.
இறுதியாக இங்கிலாந்து அணி 54.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…