Matt Henry [file image]
ஐபிஎல் 2024 : லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் வில்லிக்கு பதிலாக தற்போது மாட் ஹென்றி இடம்பெற்றுள்ளார்.
நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தற்போது ஒவ்வொரு போட்டியும் களைகட்டி கொண்டு நடைபெற்று பெறுகிறது. இது வரை 10 போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் லக்னோ அணி ஒரு போட்டியை மட்டும் விளையாடி உள்ளது. அந்த ஒரு போட்டியிலும் லக்னோ அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியுற்று இருந்தது.
தற்போது இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், பஞ்சாப் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் லக்னோ அணி இருந்து வரும் நிலையில் தற்போது அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரரான டேவிட் வில்லி, தனது தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த ஐபிஎல் தொடரிலுருந்து வெளியேறி இருக்கிறார்.
டேவிட் வில்லியை லக்னோ அணியின் நிர்வாகம் ஐபிஎல் 2024 ஏலத்தின் போது ரூ.1.50 கோடிக்கு எடுத்தனர். அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்குவதுற்கு முன் டேவிட் வில்லி இந்த தொடரின் ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த ஐபிஎல் 2024 தொடர் முழுவதிலும் இருந்து வெளியேறி உள்ளார் என தெரிய வந்துள்ளது.
இவருக்கு பதிலாக இந்த ஐபிஎல் தொடரில் நியூஸிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான மாட் ஹென்றியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகம் எடுத்துள்ளது. மாட் ஹென்றி இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…