“எனக்கு விசில் போட தெரியாது.. ஆனா உங்க கையாள உங்கள விசில் போட வைப்பேன்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.
இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் நெருங்கவுள்ள நிலையில், அதற்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 57 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முக்கிய வீரர்களான ஆரோன் பின்ச், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட வீரர்களை சங்க எந்த அணியும் முன்வரவில்லை.
2019-ல் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.3 கோடிக்கு ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. அவர் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகள் விளையாடி 196 ரன்கள் எடுத்தார். தற்பொழுது ராஜஸ்தான் அணியில் இருந்த உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 கோடி ருபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
சென்னை அணியில் தொடக்க வீரராக இருந்த ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார். மேலும், முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை அணி ராபின் உத்தப்பாவை தேர்வு செய்துள்ளது. தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் ராபின் உத்தப்பா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “வணக்கம் சென்னை.. எப்படி இருக்கீங்க” என ஆரமித்து தமிழில் உரையாற்றினார். அப்பொழுது அவர், “எனக்கு விசில் போட தெரியாது.. ஆனா உங்க கையாள உங்கள விசில் போட வைப்பேன்” என பேசினார். தற்பொழுது அந்த விடியோவை சென்னை அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…