Dinesh Karthik [file image]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்காவில் ஒரு முறை விளையாடச் சென்ற பொது தனக்கு நேர்ந்த அமானுஷ்ய அனுபவம் குறித்து ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அல்லாது ஐபிஎல் தொடரிலும் தனது தனித்துவமான திறமையால் பார்வையாளர்களை கட்டி இழுப்பவர் தான் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக். சர்வேதச போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும் ஐபிஎல் தொடரில் என்றாலே இடம்பெற்றிருக்கும் அணிக்காக சிறப்பாகவே விளையாடி வருவார்.
இந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பக்கபலமாக தினேஷ் கார்த்திக் விளையாடினார். அதன் பின் கடைசியாக எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு ஒரு சில போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயலாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் நேற்றைய நாளில் அதாவது சுதந்திர தின விழாவில் சிறப்பு வீடியோவாக தனியார் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை அளிக்கும் க்ரிக்பஸ் (Cricbuzz) தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்த வீடியோவை வெளியிட்டிருந்தனர். தினேஷ் கார்த்திக் ஆரம்ப கட்டத்தில் இந்தியா-A அணிக்காக விளையாடிய போது ஒருமுறை தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் சென்றிருந்தனர்.
அப்போது இந்திய அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில், அவருக்கு ஏற்பட்ட அந்த அமானுஷ்ய அனுபவத்தைப் பற்றி அந்த வீடியோவில் பேசி இருந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, “நாங்கள் சன் சிட்டியில் தங்கியிருந்தபோது, ஒரு நேரத்தில் அறைக்குள் ஏதோ அசௌகரியமான உணர்வை உணர்ந்தேன்.
அது மிகவும் வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. அது என்னவென்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும் அது ஒரு வகையான அமானுஷ்ய உணர்வு” என்று க்ரிக்பஸ் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தினேஷ் கார்த்திக் பேசி இருந்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…