நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பந்து வீச தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 3-வது பந்திலே புவனேஷ்குமார் ஓவரில் போல்ட் ஆனார்.
அடுத்து இறங்கிய மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்டில் உடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினார். இருவரும் கூட்டணியில் 110 ரன்கள் சேர்ந்தது. அதிரடியாக விளையாடிய அரைசதம் விளாசி 63 ரன்கள் குவித்து 14-வது ஓவரில் 2-வது பந்தில் அஸ்வின் வீசிய சூழலில் போல்ட் ஆனார். அடுத்து இறங்கிய க்ளென் பிலிப்ஸ் அதே ஓவரில் 5-வது பந்தில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். இருப்பினும் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் சிறப்பாக விளையாடிய 42 பந்தில் 4 சிக்ஸர் , 3 பவுண்டரி என மொத்தம் 70 ரன்கள் விளாசி ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த டிம் சீஃபர்ட் 12, ரச்சின் ரவீந்திரன் 7 ரன்கள் எடுக்க இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் புவனேஷ்குமார், அஸ்வின் தலா 2, தீபக் சாஹர், சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…