இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச தீர்மானித்தது அதன்படி களமிறங்கியது இந்திய அணி.லோகேஷ் ராகுல் ,புஜாரா,ரஹானே சிறப்பாக ஆடவில்லை என்றாலும் மாயங் அகர்வால்(55) மற்றும் விராட் கோலி(76) அரைசதம் கடந்தனர் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது .அப்பொழுது ரிஷாப் பந்த் (27) மற்றும் ஹனுமா விஹாரி (42) களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள்
இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது அதில் ஹனுமான் விஹாரி(111) அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.இதில் 16 பௌண்டரிகள்அடங்கும். பின்பு இஷாந்த் ஷர்மா(57) தனது பங்கிற்கு அரை சதம் அடித்து மேற்கிந்திய தீவின் பந்து வீச்சை தும்சம் செய்தனர்.முதல் இன்னிங்சில் இந்தியா 416/10 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது .
தடுமாற்றத்தில் மேற்கிந்திய தீவு
அதன் பின்பு களமிறங்கிய மேற்கிந்திய தீவு இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது .30 ரன்களை தாண்டுவதற்குள் பும்ராவின் மஜிக்கில் அடுத்தடுத்து 5 விக்கெட்களை இழந்தது.8 வது ஓவரில் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் இதனால் சற்று நிலை தடுமாறியது மேற்கிந்திய தீவு.அந்த அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் 34 ரன்கள் எடுத்து ஷமியிடம் விக்கெட்டை இழந்தார்
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவு 7 விக்கெட்கள் இழப்புக்கு 87 ரன்களை எடுத்துள்ளது பும்ரா 6 விக்கெட்களையும் முகமத் ஷமி 1 விக்கெட்டை எடுத்தார் .
IND 416 – WI 87/7 (33.0)
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…