இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச தீர்மானித்தது அதன்படி களமிறங்கியது இந்திய அணி.லோகேஷ் ராகுல் ,புஜாரா,ரஹானே சிறப்பாக ஆடவில்லை என்றாலும் மாயங் அகர்வால்(55) மற்றும் விராட் கோலி(76) அரைசதம் கடந்தனர் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது .அப்பொழுது ரிஷாப் பந்த் (27) மற்றும் ஹனுமா விஹாரி (42) களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள்
இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது அதில் ஹனுமான் விஹாரி(111) அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.இதில் 16 பௌண்டரிகள்அடங்கும். பின்பு இஷாந்த் ஷர்மா(57) தனது பங்கிற்கு அரை சதம் அடித்து மேற்கிந்திய தீவின் பந்து வீச்சை தும்சம் செய்தனர்.முதல் இன்னிங்சில் இந்தியா 416/10 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது .
தடுமாற்றத்தில் மேற்கிந்திய தீவு
அதன் பின்பு களமிறங்கிய மேற்கிந்திய தீவு இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது .30 ரன்களை தாண்டுவதற்குள் பும்ராவின் மஜிக்கில் அடுத்தடுத்து 5 விக்கெட்களை இழந்தது.8 வது ஓவரில் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் இதனால் சற்று நிலை தடுமாறியது மேற்கிந்திய தீவு.அந்த அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் 34 ரன்கள் எடுத்து ஷமியிடம் விக்கெட்டை இழந்தார்
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவு 7 விக்கெட்கள் இழப்புக்கு 87 ரன்களை எடுத்துள்ளது பும்ரா 6 விக்கெட்களையும் முகமத் ஷமி 1 விக்கெட்டை எடுத்தார் .
IND 416 – WI 87/7 (33.0)
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…