#IPL BREAKING: 1000-வது ஐபிஎலில் மும்பை அணி வரலாற்று வெற்றி..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs RR போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎலின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையின் வான்கடே மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணியில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன் பொறுப்பாக விளையாடினார். ஆனால், அவரும் சிறிது நேரத்தில் களத்தை விட்டு வெளியேற, கேமரூன் கிரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இறுதியில் கேமரூன் கிரீன் தனது விக்கெட்டை இழக்க, சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார். முடிவில் திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் களத்தில் இருக்க, இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்தநிலையில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்கல் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதனால் மும்பை அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 55 ரன்களும், டிம் டேவிட் 45 ரன்களும், கேமரூன் கிரீன் 44 ரன்களும், திலக் வர்மா 29 ரன்களும், இஷான் கிஷன் 28 ரன்களும் குவித்துள்ளனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 1000 ஆவது போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

46 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

19 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago