#IPL BREAKING: ராணா, ரிங்கு சிங் அசத்தல் பேட்டிங்..! KKR அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரில் இன்றைய CSK vs KKR போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணி அளவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. அதில், அதிகபட்சமாக சிவம் துபே 48* ரன்களும், கான்வே 30 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 20 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறுகிய இலக்கில் கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் குர்பாஸ் களமிறங்கினர். இதில் குர்பாஸ் சாஹர் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய வெங்கடேச ஐயரும் சாஹர் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து, நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஜோடி பொறுப்பாக விளையாடி அணியின் வெற்றிக்காக ரன்களை குவித்தனர். இருவரும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டு அரைசதம் அடித்து விளாசிய நிலையில், சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ரிங்கு சிங் 54 ரன்கள் எடுத்து ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ராணா மற்றும் ரஸல் களத்தில் நிற்க, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 57* ரன்களும், ரிங்கு சிங் 54 ரன்களும் குவித்துள்ளனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago