ஐபிஎல் தொடரின் கடைசி இரு இடங்களில் இருக்கும் இரு அணிகள் இன்று பலப்பரிட்சை…

Published by
kavitha

 நடப்பு ஐபிஎல் தொடரின்  முதல் வெற்றியை பெறும் முனைப்பில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று களம் காணுகின்றன.

ஐக்கிய அமீரக அபுதாபியில்  இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் விளையாடு உள்ளன. இரண்டு அணிகளும்  இதுவரை தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளன. கொல்கத்தா அணி தனது முதல்  போட்டியில் மும்பையிடம் 49ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.  அதேபோல் ஐதராபாத் அணியும் பெங்களூர் அணியிடம் 10 ரன் வித்தியாசத்தில்  தோற்றது. ஐபிஎல் போட்டிகள்  தொடங்கி ஒரு வாரம் முடிந்த நிலையில் இன்னும்  வெற்றிக் கணக்கை தொடங்காத அணிகளாக கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மட்டுமே  இருக்கின்றன. புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் இந்த இரண்டு அணிகளும்  உள்ளன. அதனால் இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்று வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக்கும்,  டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணிகள் முயற்சி செய்யும்.  கூடவே  யுஏஇயில் நிலவும் கடுமையான வெப்பத்துடனும் வீரர்கள் போராட வேண்டி இருக்கும்

Published by
kavitha
Tags: IPLISSUEwin

Recent Posts

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

3 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago