பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
உலகளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர். இந்நிலையில், ஐபிஎல் தொடருக்காக கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டனர்.
இந்நிலையில், நேற்று மேற்கொண்ட பரிசோதனையில் தீபக் சாஹர் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்று அனைவர்க்கும் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது, மேலும் இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர் சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சந்திப்பில் கூறியது, ஐபிஎல் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன்.மிக நீண்ட தொடர் என்பதால் எல்லாம் சிறப்பாக நடைபெறும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். நான் எனது வேலையை வழக்கமாக தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…