ஆடுகளத்தில் அசத்தும் அசுர சுழல்…! சிக்கி சிதறும் அணிகள்

Published by
kavitha

கடந்த 2018-19 வருடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் ஐபிஎல் போட்டியில் களமிரங்கியவர். இவருடைய கேப்டன்ஷிப்பில் 28 ஆட்டங்களில் பஞ்சாப் 12 வெற்றி, 16 தோல்வி கண்டது. 2018 புள்ளிகள் பட்டியலில் 7 இடத்திற்கும் அதே போல்2019 வருடம் 6வது இடத்தையும்மும் பிடித்தது.

2 வருடங்களிலுமே கடைசி ஆட்டத்தில் மோசமாக விளையாடியதால் பிளேஆஃப் சுற்றுக்கு அவ்அணியால் தகுதி பெற முடியாமல் வெளியேறியது.ஆனால் இந்தாண்டு புதிய அணி, புதிய பயிற்சியாளர்கள், புது கேப்டனுடன் களமிறங்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முடிவெடுக்கப்பட்டது. இதனால்  அஸ்வின் டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.2018ல் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.60 கோடிக்குப் பஞ்சாப் அணி தேர்வு செய்தது . இந்நிலையில் இவ்வருடம் இதே தொகைக்கே அஸ்வினை தில்லி அணி பெற்றுக்கொண்டு தன் வசப்படுத்தியது.

இந்நிலையில் புதிய அணி அனுபவத்தோடு களமிரங்கி விளையாடும் வரும் அஸ்வின் தனது சுழலை சிறப்பாகச் சுழற்றி பந்துவீசி வருகிறார்.மேலும் புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி  முதலிடம் வகித்து வருகிறது.இதற்கு முக்கியக் காரணமாக அஸ்வின் இருந்து வருகிறார்.அஸ்வின் இதுவரை விளையாடியுள்ள 4 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் எடுத்து உள்ளார். அவருடைய எகானமி 6.90 .

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் குறைந்தது 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள வீரர்களில் குறைந்த எகானமி உள்ள வீரர்களில் அஸ்வின் 4வது இடத்தில் உள்ளார்.

மேலும் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது.

இந்நிலையில் பஞ்சாப் அணி விக்கெட் எடுக்கத்  தடுமாறி வரும் நிலையில் டெல்லிக்கு விடுவித்த அஸ்வின், தில்லி அணிக்காக சிறப்பாகப் பந்துவீசி  வருகிறார். இவ்வருடம் பஞ்சாப் அணி எடுத்த பல முடிவுகள் தவறுதலாகவே இருக்கின்றது என்று விமர்சனங்கள் இருந்து வருகிறது.மேலும் அந்த அணி அஸ்வினை விடுவித்தது பெரிய தவறு என்பதை இத்தருணத்தில் உணந்திருப்பார்கள்.

தில்லி அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதே உற்சாகத்துடன் தனது சுழல் வீச்சாளால் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க சந்தர்பங்கள்  உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 
Published by
kavitha

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago