ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்.
நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், அதிகளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 22 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இறுதி போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29-ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு இறுதிப்போட்டி அந்த மைதானத்தில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…