ஜடேஜா அதிரடி வீணானது! கடைசிவரை போராடி தோல்வியடைந்த இந்திய அணி !

Published by
murugan

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நியூஸிலாந்து அணி நேற்று 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் இருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று போட்டி தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து  239 ரன்கள் எடுத்தது.

240 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,கே.எல் ராகுல் இருவரும் களமிங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ரோஹித் 4 பந்தில்  1 ரன் எடுத்து வெளியேறினார்.

பின்னர்  களமிறங்கிய கேப்டன் கோலி  6 பந்தில் 1 ரன்னுடன்  வெளியேறினர். அடுத்ததாக கே.எல் ராகுலும் 1 ரன்னுடன் வெளியேற  3 விக்கெட்டை இழந்து 5 ரன்கள் எடுத்து இந்திய அணி திணறி வந்தது.

அப்போது தினேஷ் கார்த்திக்  , ரிஷாப் பண்ட் இருவரும் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் இறங்கிய ஹர்திக் , ரிஷாப் பண்ட் இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.

சிறப்பாக விளையாடி வந்த ரிஷாப் பண்ட் 32 ரன்னில் வெளியேறினார். இறுதியாக தோனி , ஜடேஜா இவர்கள்  கூட்டணியில் இணைய ஜடேஜா அதிரடி  ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இவர்கள் இருவரின் கூட்டணியில் சத்தத்தை எட்டியது. இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Published by
murugan

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

46 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago