Jaisha, BCCI Secretary [file image]
ஜெய்ஷா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மைதானத்தில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக ஜெய்ஷா தற்போது அறிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்-22ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு நேற்றைய நாளில் முடிவடைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருந்தனர். இதன் மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றினார்கள்.
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி முடிவடைந்தவுடன் அந்த தொடரில் சிறப்பாக செயலாற்றிய வீரர்களுக்கு விருதுகள் வழங்குவார்கள். அதில் இந்த வருடத்திற்கான சிறப்பான மைதானம் அமைத்ததற்காக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அந்த விருதையும், ரூ.10 லட்சத்தையும் பெற்றிருந்தது.
தற்போது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவரான ஜெய்ஷா மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் மைதானத்தில் உழைத்த ஊழியர்களை பாராட்டும் விதமாக ஐபிஎல் தொடரில் ஆடுகளம் அமைத்த 10 மைதானங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க உள்ளதாக தனது க்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில், “கடினமான வானிலைகளிலும் கூட அற்புதமான பிட்ச் மற்றும் ஆடுகளங்களை அமைக்க அயராது உழைத்த ஊழியர்களை பாராட்டும் விதமாக 10 மைதானங்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ.25 லட்சம் வழங்கவுள்ளோம். அவர்களது இந்த கடினமான உழைப்பிற்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறோம்”, என பதிவிட்டிருந்தார்.
இது மைதானத்தில் கடினமாக உழைக்கும் ஊழியர்களை ஊக்குவித்து அவர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக பரிசு தொகை அறிவித்ததை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இதனால் மைதான ஊழியர்களும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…