சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 153 ரன்கள் அடித்துள்ளது.
இன்றைய ஐபிஎல் தொடரின் 53- வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ,முதலில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் – மயங்க் ஆகியோர் களமிறங்கினார்கள்.தொடக்கத்தில் மயங்க் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ராகுல் 29 ரன்கள் , கெயில் 12 ரன்கள்,பூரன் 2 ரன்கள்,மந்தீப் 14 ரன்கள் ,ஜிம்மி 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் தீபக் ஹூடா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது.களத்தில் ஹூடா 62 *ரன்கள் , ஜோர்டன் 4* ரன்களுடன் இருந்தனர்.154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது. சென்னை அணியின் பந்துவீச்சில் லுங்கி என்கிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…