இதர வீரர்களிடம் விராட் கோலி, பிட்னஸ், உடற்பயிற்சி, சிறப்பான பீல்டிங் உள்ளிட்ட பலவற்றை விராட் கோலி எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனைத்து தலைமை பயிற்சியாளர்களைவிட ரவி சாஸ்திரி, மிக சிறந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரிடம் பயிற்சி பெற்றுவரும் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. மேலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ஒரு கேப்டனாக விராட் கோலி, தனது பணியை சிறப்பாக செய்து வருவதாக கூறினார். ஒரு கேப்டனாக அவர் அணியை நாளுக்கு நாள் சிறப்பாக வழிநடத்திச் செல்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், அவரின் பணியை சிறப்பாக செய்வதில் எந்தவொரு ஆசிரியமும் இல்லையென கூறினார்.
மேலும் இதர வீரர்களிடம் விராட் கோலி, பிட்னஸ், உடற்பயிற்சி, சிறப்பான பீல்டிங், இது சரியல்ல, அது தவறு போன்ற சாக்குப்போக்குகள் கூறாமல் இருப்பதை கேப்டன் விராட் கோலி எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் மிகவும் வியப்பாக உள்ளதாகவும், அவரின் கடின உழைப்பால் மட்டுமே அவர் தனது பேட்டிங்கை வலுப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இனி வரும் தமிழக அணிக்கான அனைத்து போட்டிகளிலும் அவர் நிச்சயம் டாப் 4-ல் விளையாட வேண்டும் என்றும், இதுகுறித்து நான் பேசவேண்டியது நேர்ந்தால், தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிடமும், அணியின் அதிகாரிகளிடமும் பேச தயார் என்று கூறினார்.
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…