ஐபிஎல் வரலாற்றில் இரு அணியிலும் சதம்…சாதனை படைத்த கோலி- ஹென்ரிச் கிளாசென்.!!

Published by
பால முருகன்

முதல்முறையாக ஒரே ஐபிஎல் போட்டியில் இரண்டு அணி வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பிளே ஆப் சுற்று தொடங்கப்படவுள்ளது. எனவே, பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் என்ற நோக்கில் புள்ளி விவர பட்டியலில் இருக்கும் முதல் 6 அணிகள் நடைபெறும் போட்டியில் அனைத்திலும் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கில் விளையாடி வருகிறது.

அந்த வகையில், நேற்று (வியாழன்) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது. மேலும், இந்த போட்டியில் இரு அணி தரப்பு வீரர்களும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.

நேற்று நடந்த இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி  51 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அதைப்போல பெங்களூர் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இரு அணி வீரர்களும் முதல்முறையாக ஒரே ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

மேலும், நேற்று சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி ஐபிஎல் தொடரில் அதிக சதம் (6) அடித்தவர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை  சமன் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago