T20 Worldcup 2024 , 2nd Semifinal [file image]
டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நாளை அரை இறுதி போட்டியானது தொடங்க இருக்கிறது. இதில் முதல் அரை இறுதி போட்டியாக ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது.
அதே போல் அடுத்த நாள் அதாவது நாளை மறுநாள் (ஜூன்-27) இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் 2-வது அரை இறுதி போட்டியில் விளையாடவுள்ளனர். முதல் அரை இறுதி போட்டியானது ஒரு வேளை மழை காரணமாக தடைபெற்று நடக்காமல் போனால் ரிசர்வ் நாளான மறுநாள் (ஜூன்-27) இந்த போட்டியானது நடத்தப்படும்.
தற்போது, வெளியான தகவலின்படி கயானாவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாட இருக்கும் 2-ஆம் அரை இறுதி போட்டியில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு வேளை 2-வது அரை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் இந்த 2-வது அரை இறுதி போட்டிக்கு ரிசர்வ் நாளை ஐசிசி அறிவிக்கவில்லை.
மேலும், இறுதி போட்டிக்கு அடுத்து ஒருநாள் மட்டுமே பயிற்சி செய்ய இருப்பதன் காரணமாக இந்த போட்டிக்கு ரிசர்வ் நாளை ஒதுக்கவில்லை. இதன் காரணமாக அந்த போட்டியானது நடைபெறுமால் இருந்தால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடுவார்கள்.
அதற்கு காரணம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றிலும், லீக் சுற்றிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்து இருந்ததன் காரணமாக இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…