இந்திய அணி ஐசிசி அறிவித்துள்ள முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளை அங்கு சென்று சந்திக்கிறது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள 2018-23 கிரிக்கெட் தொடர்களுக்கான எதிர்கால தொடர்கள் திட்டத்தை (எஃப்.டி.பி) வெளியிட்டது. 2 டெஸ்ட்கள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மே.இ.தீவுகளை எதிர்த்து அங்கு ஆடுகிறது இந்திய அணி. மொத்தம் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 102 சர்வதேச போட்டிகளில் 2018 முதல் 2023 வரை உள்நாட்டில் ஆடுகிறது. இந்த சவுகரியம் […]
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது. இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையின் […]
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான், கிரேக் ஓவர்டன் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயம் அடைந்திருக்கும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளர். […]
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு இடையில் கால்பந்து தொடரில் நடைபெறும் லீக் போன்று சாம்பியன்ஷிப் தொடரை நடத்த திட்டமிட்டது. இதுகுறித்து அனைத்து கிரிக்கெட் வாரியத்திடமும் பேசியது. பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் ஐசிசி வருங்கால சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 முதல் 2021 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடத்துவது என்பதில் மட்டும் […]
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்து, மிக அரிதான சாதனையை அவர் படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 34ஆவது இடத்தில் இருந்த தவான் 10 இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தற்போது வரை இவர் பெற்ற சிறந்த தரம் இதுவாகும். இதேபோல் முரளி விஜய் 23ஆவது இடத்துக்கு […]
அச்சுறுத்தல் காரணமாக தோனியின் மனைவி சாக்ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்ஷி.இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது. இந்நிலையில் தற்போது அச்சுறுத்தல் காரணமாக தோனியின் மனைவி சாக்ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்துள்ளது. இது தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தற்போது வரை குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கேராக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இதே இங்கிலாந்து அணி 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 444 ரன்கள் எடுத்தது தான் உள்ளது. 2006-ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி குவித்த 443 ரன்கள் தான் 3வது அதிகட்ச […]
நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 139 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ரன்களும் சேர்த்தனர். 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 444 […]
ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்ஸன், அம்பதி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி ஆகியோர் முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் நடத்தப்பட்ட யோ யோ, டெக்ஸா சோதனையால்தான் இந்திய அணியில் இடம் பெறமுடியாமல் போயுள்ள விவரம் வெளியாகியுள்ளது. இந்திய அணி நிர்வாகத்துக்கும், பிசிசிஐ அமைப்புக்கும் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்தால், இங்கிலாந்து செல்லும் இந்திய அணியைத் தேர்வு செய்தபின்தான் வீரர்களுக்கு யோ யோ, டெக்ஸா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் யோ யோ சோதனை என்பது, வீரர்கள் பீல்டிங் செய்யும் மற்றும் […]
65 மில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடன் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் அணியின் ஐபிஎல் 2018 தொடரின் மதிப்பு மிக்க பிராண்டாக எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமிருந்து மதிப்பு மிக்க பிராண்ட் என்ற தகுதியை பெற்றது. இந்த பிராண்ட் வேல்யூ ஆய்வை நடத்தியது பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற முன்னணி பிராண்ட் மதிப்பு ஆய்வு நிறுவனமாகும். தோனி தலைமை சிஎஸ்கே அணி 65 மில்லியன் அமெரிக்க […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒருநாள் அணியில் தன்னைத் தேர்வு செய்யாதது தனக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது என்று உஸ்மான் கவாஜா வருந்தியுள்ளார். இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்காக உஸ்மான் கவாஜா கூறியதாவது: உள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஜஸ்டின் லாங்கரிடமும் பேசினேன், அணித்தேர்வுக்குழுவினரிடத்திலும் பேசினேன். ஆனால் சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய ரன்களைக் […]
கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்துக்குச் சரிந்து, பாகிஸ்தானுக்கும் கீழாகச் சென்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியை அடைந்த காரணத்தால், தரவரிசைப்பட்டியலில் பாதாளத்துக்குச் சென்றது. 6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம் என்றேதான் கூற முடியும். இதற்கு முன் கடைசியாக தரவரிசைப்பட்டியலில் 6-ம் இடத்தில் கடந்த 1984ம் ஆண்டு ஆஸ்திரேலியா இருந்தது […]
நாளுக்குநாள் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டம் மோசமடைந்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. முரளிதரன், ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முதலில் மகேலா ஜெயவர்தனேவை அணுகியது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முத்தையா முரளிதரனை அணுகியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தர அவரும் மறுத்துவிட்டார். தொடர்ந்து தோல்விகளைச் […]
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா ஒரே நாளில் கிரிக்கெட், ரக்பி, டென்னிஸ், கால்பந்து ஆகிய நான்கு வகை விளையாட்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. கடந்த ஜூன் 16-ம் தேதி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடந்த போட்டியில், ‘சி’ பிரிவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணி, பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து அதே நாளன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி […]
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஈடு இணை இல்லா அற்புதம் நீ” என்று தந்தையர் தினத்தன்று தன்னுடைய பாசத்தை தமிழில் கொட்டி தீர்த்துள்ளார் . சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தன்னுடைய கருத்துகளை தமிழில் பதிவிட்டு தமிழர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் ஹர்பஜன் சிங். தமிழ் மீது அலாதி பிரியும் கொண்ட அவரின் ட்விட்டுகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையை […]
கடந்த 14-ந்தேதி இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டே நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா தவான் (107), முரளி விஜய் (105) ஆகியோரின் சதத்தால் இந்தியா 474 ரன்கள் குவித்தது. டி20 போட்டியில் […]
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார் என்று தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-,இ- இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கான் வெற்றி பெறுவார். எனவே இவரது கட்சியில் நிறைய பேர் சேர்ந்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற பின் மேலும் பலர் இணைவார்கள். ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எனது […]
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் மீது பந்தை சேதப்படுத்தியதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து, பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சந்திமாலுக்கு தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்தியத்தீவுகள் சென்றுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது. 2-வது ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 123 […]
இங்கிலாந்தின் கார்டிப்பில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஜேஸன் ராயின் முத்தாய்ப்பான சதம், பட்லரின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால், 38 ரன்களில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி. சதம் அடித்து அசத்திய ஜேஸன் ராய் ஆட்டநாயகராக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றபின் அந்த அணி சந்திக்கும் 2-வது தோல்வியாகும். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. வரும் செவ்வாய்கிழமை […]