உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் நுழையும் குழந்தையான ஆப்கான் வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியில் சந்திக்கிறது. குழந்தையைத்தான் அனைவரும் சீண்டிப்பார்த்திருக்கிறோம், ஆனால் குழந்தை பெரியவர்களைச் சீண்டுவதை இப்போது ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் மூலம் பார்க்கிறோம். டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 4 மற்றும் 5ம் இடத்தில் உள்ள ஜடேஜா, அஸ்வினை விடவும் தங்களிடம் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர் என்கிறார் ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய். இவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு […]
சென்னையில் 2018 ஐபிஎல் டி20 சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் சாம்பியன்ஷிப் வெற்றியை கொண்டாடினர். அதில் தோனி மிகவும் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசினார். அப்போது “அடுத்த ஆண்டு சென்னையில் வென்ற கோப்பையை மீண்டும் தக்கவைப்போம் என்று நம்புகிறேன். விஷயம் என்னவெனில் சிஎஸ்கேவினால் ஒரு போதும் காவிரியை இங்கு கொண்டு வர முடியாது. ஆம் வழியேயில்லை. ஆனாலும் நாங்கள் குறிவைக்கப்பட்டோம், நியாயமானதுதான், இப்படி எப்போதும் நடக்கக் கூடியதுதான். ஆனால் நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் வெல்ல […]
இந்திய அணி கேப்டன் விராட் கோலி , என் தாடியை பற்றி அனைவரும் பேசுவது நல்ல பொழுப்போக்காக இருக்கிறது என்று ராகுல், உமேஷ்,சாகல் ஆகியோருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். The talk around my beard is quite entertaining. @klrahul11, @buntysajdeh, @yuzi_chahal, @y_umesh it's popcorn time boys ???? #ViratBeardInsurance — Virat Kohli (@imVkohli) June 9, 2018 இந்திய கிரிக்கெட் வீரரான லோகேஷ் ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் […]
பங்களாதேஷ் பெண்கள் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பங்களாதேஷ் பெண்கள் அணி 20 ஓவர்களில் 130/4 ரன்கள் அடித்தனர்.அதிகபட்சமாக ஷமிமா 43, அயாஷா 31, பஹீமா 26 * ரன்கள் அடித்தனர்.மலேசிய பெண்கள் அணியின் பந்துவீச்சில் வின்ஃபிரெட் 2/19 சிறப்பாக பந்துவீசினர். பின்னர் களமிறங்கிய மலேசிய பெண்கள் அணி 20 ஓவர்களில் 60/9 மட்டுமே அடித்தனர். அதிகபட்சமாக வின்ஃபிரெட் 17, மாஸ் 14, ரன்கள் அடித்தனர். பங்களாதேஷ் பெண்கள் அணி ருமானா 3/8, காதிஜா 1/8, சல்மா […]
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆசியக் கோப்பை மகளிர் 20-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 3.,ஆம் தேதி முதல் மலேசியாவில் இந்தியா, வங்க தேசம், மலேசியா, பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, 73 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்டியது. கேப்டன் […]
ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆப்கன் மற்றும் வங்கதேச அணிகளுக்கெதிரான தொடரை ஆப்கன் அணி 3-0 என வங்க புலிகளை வைட்வாஷ் செய்தது. இதனால் ஆப்கன் அணி 4 புள்ளிகள் அதிகமாக பெற்று, தற்போது 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 9வது இடத்தில் இலங்கையும், 10வது இடத்தில் வங்கதேசமும் மண்ணை கவ்விக்கொண்டு இருக்கிறது. பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியில் இருந்து டாப்-10ல் ஒரே […]
இந்திய கிரிக்கெட் வீரரான லோகேஷ் ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது தாடியை காப்பீடு செய்துள்ளதாக கூறி, தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் விராட்கோலியின் தாடியை இருவர் அளவெடுப்பது போன்றும் பின்னர் கோப்புகளில் விராட் கோலி கையெழுத்திடுவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. Haha, I knew you were obsessed with your beard @imVkohli but this news of you getting […]
50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்து – நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்ஸ், வாட்கின் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். வாட்கின் 59 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பேட்ஸ் உடன் எம்எல் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அயர்லாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை […]
ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. டேராடுனில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி சிறப்பாக விளையாடினாலும், கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் ,இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தாங்கள் வாய்மூடி அமைதியாக இருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் அந்நாட்டு அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் 13ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்க உள்ள நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்காக ஆஸ்திரேலிய அணியினர் வாய்மூடி அமைதியாக இருக்க […]
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா வந்துள்ள நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மைதானத்தில் வங்காளதேசம் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது.டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது. இங்கு புகழ்பெற்ற நபர்களின் சிலைகள் இடம் பெறுவது வழக்கம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு […]
இந்திய அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்த அவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை போலவே மகனும் சாதிப்பாரா என்று சச்சின் […]
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது. அவ்வப்போது விராட் கோலி சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிடுவார்.இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் கார்டியோ உடற்பயிற்சியை தாம் செய்து முடித்த பின்னரும் கூட, மனைவி அனுஷ்கா சர்மா அதிகமாகச் செய்வதாக விராட் கோலி பாராட்டியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது, ஜடேஜா செய்த காரியத்தைப் பார்த்து அவரை அடிக்க வேண்டும், முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது என தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் மிகவும் மென்மையானவர், களத்தில் அமைதியானவர், வெற்றியோ, தோல்வியோ அதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாதவர் என்ற பெயர் எடுத்தவர் ரோகித் சர்மா. அவரின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஆவேசமும் இருக்குமே தவிர, முகத்திலும், எதிரணியை ஆத்திரப்படுத்தும் பேச்சு இருக்காது. ஆனால், ஒரு சம்பவத்தில் ரோகித் சர்மாவே […]
பெண் எழுத்தாளர் ரெஹம்கான் எழுதிய புத்தகத்திற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ரெஹம் கானின் புத்தகம் ஆபாசமானது என்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அப்பகுதிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள இம்ரான்கான், குடும்ப உறவுகளின் தன்மையை அப்புத்தகம் சிதைப்பதாகவும், நவாஸ் ஷெரீப்பின் தூண்டுதலால்தான் ரெஹம்கான் இதை எழுதியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.