இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 12 மாதங்களில் விளையாட்டு வீரர்கள் பெற்ற ஊதியத்தை கணக்கில் கொண்டு 2018ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியல் தயாராகி உள்ளது. 100 இடங்களுக்கான இந்தப் பட்டியலில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான ஃபிலாய்டு மேவெதர் ஆயிரத்து 900 கோடி ரூபாய் வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் விராட் கோலி 160 கோடி ரூபாய் வருமானத்துடன் 83ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். […]
ஆஸி. கிரேட் கிளென் மெக்ரா,2014-ல் இங்கிலாந்தில் ஆடிய கோலி இப்போது இல்லை என்றாலும் பார்மில் உள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிச்சயம் விராட் கோலிக்குக் குடைச்சலைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார் . இது தொடர்பாக கிளென் மெக்ரா கூறும்போது, “கோலி தற்போது கொஞ்சம் அனுபவமிக்க வீரர். தரமான வீரர், இதைப்பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இங்கிலாந்து சூழ்நிலைகள் எப்போதும் கடினம். அதுவும் ஜிம்மி ஆண்டர்சன் இருக்கும்போது, நன்றாக வீசும்போது நிச்சயம் இது கடினமான […]
லார்ட்ஸ் தொடரில் முதல் டெஸ்ட் வெற்றி பெறும் போது முஹம்மது அப்பாஸ் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகம்மது அமிர் ஆகியோர் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைந்திருந்துள்ளனர்., இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது தரவரிசையில் 12வது பிடித்தார் ஸ்டுவர்ட் பிராட். பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 2வது இடம். மேலும் இந்த டெஸ்ட் தொடர் ,முடிந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டம் இடம் பிடித்துள்ளார். பேட்ஸ்மேன் தரவரிசை : 1 ஸ்டீவ் ஸ்மித் […]
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனுஷ் ரமலான் நோன்பு காலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த வாசிம் அக்ரமின் பிறந்தநாள் ஜூன்3ஆம் தேதி கொண்டாடப்பட்ட போது வக்கார் யூனுசும், வாசிம் அக்ரமும் கேக் வெட்டினர். ஆனால் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் கேக் வெட்டியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை அடுத்து தமது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள வக்கார் யூனுஷ், […]
குளோபல் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் இம்மாதத்தில் கனடாவில் நடைபெறவுள்ள நிலையில் டொராண்டோவிலிருந்து 25 மைல்கள் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெறுகிறது. இந்த டி20 லீக் கிரிக்கெட்டில் பால் டேம்பரின் தடை பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உட்பட பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா, மே.இ.தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், டேரன் சமி டிவைன் பிராவோ ஆகியோரும் […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகார் தவாண்,சதம் அடித்தல், கேட்ச் பிடித்து விக்கெட் வீழ்த்துதல் ஆகிய கொண்டாட்டத்தின் போது கபடி ஸ்டைலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். முறுக்கு மீசை ஷிகார் தவாணின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆனால், சமீபகாலமாக அவர் சதம் அடித்தாலும், கேட்ச் பிடித்தாலும் மீசையை முறுக்கும் ஸ்டைலை அதிகமாகக் கடைபிடிக்காமல், கபடிப் போட்டியில் தொடையைத் தட்டி வீரத்தை காட்டும் ஸ்டைலை அதிகமாக பின்பற்றிவருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. இது குறித்து ‘பிரேக்பாஸ்ட் வித் […]
மும்பை மக்கள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கண்ணீரை துடைத்துவிட்டனர். இன்று இரவு நடைபெறும் கால்பந்துப் போட்டிக்கான மொத்த டிக்கெட்டுகளும்விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்துப் போட்டி மும்பையில் இன்டர்கான்டினென்டல் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, சீனாவில் சீனத் தைப்பே அணியுடன் நேற்று முன்தினம் மோதிய போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியைக் காண 2500 ரசிகர்கள் […]
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், ரெய்னா, டென்னிஸ் வீராங்கனை சானியா ஆகியோர் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கிரிக்கெட்டைப் போல்கால்பந்து விளையாட்டுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மும்பையில் நேற்றுமுன்தினம் இன்டர்கான்டினென்டல் கால்பந்துப் போட்டி நடந்தது. இதில் சீனாவில் சீனத் தைப்பே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோவைப் […]
ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றுள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. ஐபிஎல் 11வது சீசன் முடிவடைந்த நிலையில், கிரிக்கெட் கண்ட்ரி என்ற ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம், ஐபிஎல் கனவு அணியை வெளியிட்டுள்ளது. அந்த அணியில், கோப்பையை வென்ற சென்னை அணியின் ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை. சுனில் நரைன், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ள அந்த கனவு […]
வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை […]
உடல் முழுவதும் இந்திய மூவர்ணக்கொடி நிறத்தை பூசிக்கொண்டு, இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண வரும் ரசிகரான சுதிர் கவுதமை, கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள், எவரும் பார்க்காமல் இருந்திருப்பது கடினம். சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை சச்சின் தெண்டுல்கர் பலமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சுதீர் கவுதமை, இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி, தனது இல்லத்திற்கு நேரில் […]
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி , சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். ஆனால், இந்த முறை கிரிக்கெட் விளையாட இனி வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத்தீவுகள், ஐசிசி வேர்ல்டு லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, அப்பிரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்தனர். மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் கிரிக்கெட் அரங்குகள் மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட நலநதிக் கிரிக்கெட் […]
தினேஷ் கார்த்திக் இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. இதையடுத்து,ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டி,வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் விளையாடும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் சஹா விலகியுள்ளார். இந்நிலையில் சஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் […]
ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் சல்மான்கான் சகோதரர் அர்பாஸ்கான். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டம் தொடர்பான வழக்கில், பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், தானே நகர போலீஸ் முன் விசாரணைக்கு ஆஜரானார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, மகாராஷ்டிராவில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சூதாட்ட கும்பலின் தலைவன் சோனு ஜலான் என்பவனை போலீசார் கைது செய்தனர். சோனு ஜலான் கைப்பட எழுதிய டைரியையும் பறிமுதல் செய்த போலீசார், அதை ஆய்வுக்குட்படுத்தினர். அதன் அடிப்படையில் […]