பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஓமானில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
மிஸ்பா மற்றும் வக்கார் ஆகியோருக்கு செப்டம்பர் 2019 இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த பொறுப்பை வழங்கியது. அவர்களின் ஒப்பந்தம் 1 வருடம் மீதமுள்ளது. இதற்கிடையில், முன்னாள் ஆஃப் ஸ்பின்னர்கள் சக்லைன் முஷ்டாக் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோரை தற்காலிகமாக இருவருக்கும் பதிலாக அணியின் பயிற்சியாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
ஏனெனில் அடுத்த வாரமே, பாகிஸ்தான் 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 தொடருக்கான போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடருக்காக, நியூசிலாந்து அணி செப்டம்பர் 11 அன்று பாகிஸ்தானை சென்றடையும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…