சிராஜ் ஒழுங்கா பந்துவீசலனா அவரை தேர்ந்தெடுங்க! ரோஹித் ஷர்மாவுக்கு அட்வைஸ் கொடுத்த சபா கரீம்!

Published by
பால முருகன்

ஆசியகோப்பை 2023 இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ள நிலையில், இதில் விளையாடும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்று இருந்தார். ஒரு தரப்பு அவரை அணியில் சேர்த்து தவறு என்றும் மற்றோரு தரப்பில் அவர் அணியில் இருப்பது நல்லது எனவும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் சமீபத்திய பேட்டி ஒன்றில் 2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்து இந்திய அணிக்கு பக்க பலமாக இருக்கும் என  கூறியுள்ளார்.

சிராஜுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா

இது குறித்து பேசிய சபா கரீம் ” பிரசித் இப்போது மிகவும் வலுவான வேகப்பந்து வீச்சாளர். அவர் இந்திய அணியில் ஆசிய கோப்பையில் விளையாடினாள் ரோஹித் ஷர்மாவுக்கு பல வாய்ப்புகளைத் திறக்கும். அவர் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று விரும்பினால் அவர் முகமது சிராஜை மூன்றாவது சேர்த்துக்கொள்ளலாம். சிராஜ் நன்றாகப் பந்துவீசவில்லை என்றால், நீங்கள் பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்து விளையாட வைக்கலாம்.

பிரசித் கிருஷ்ணா இருப்பது நல்லது

நம்மளிடம் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர் எந்த அளவிற்கு சிறப்பாக விக்கெட் எடுக்கமுடியும் என்பது நமக்கு தெரியும். ஆனால், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற ஒருவர் இருந்தால் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா எந்த அளவிற்கு அருமையாக பந்துவீசுவார்களோ அதே அளவிற்கு அவர்களாலும் பந்துவீச முடியும். என்னை பொறுத்தவரை அணியில் பிரசித் இருப்பது நல்லது.

முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் 

பிரசித் கிருஷ்ணா இப்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ரோஹித் ஷர்மா அவரை சரியாக பயன்படுத்தவேண்டும். நான் முதலில் சொன்னது தான் சிராஜ் ஒருவேளை நன்றாக விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்துக்கொள்ளவேண்டும் ” என சபா கரீம்  கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago