அடுத்த ஜெய்ஸ்வால் இந்த இளம் வீரர் தான்… சங்ககாரா பெருமிதம்.!

Published by
மணிகண்டன்

IPL2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் மீது அதிக நம்பிக்கை உள்ளது. – பயிற்சியளர் சங்ககரா.

ஐபிஎல் 17வது சீசன் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்தும், ராஜஸ்தான் அணி இளம் வீரர்கள் குறித்தும் நேற்று ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சங்ககரா பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிடுகையில், ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் பற்றி அதிகம் பகிந்து கொண்டார். ரியான் பராக் திறமை கண்டு அவரது 17வது வயதிலேயே ராஜஸ்தான் அணி அவரை அணியில் எடுத்துவிட்டது. அப்போது முதல் இந்த சீசன் சேர்த்து 6வது ஆண்டாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு முதல் அவரது பங்கு ராஜஸ்தான் அணிக்கு அதிக பலன் கொடுத்து வருகிறது.

அவரது திறன் கண்டே, கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அவரை 4.6 கோடிக்கு மீண்டும் ராஜஸ்தான் அணி எடுத்தது. அவர் கடந்த சில சீசன்களாக பினிஷர் ரோல்களில் ரியான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 123.97 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

ஏற்கனவே, ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதனையும் ரியான் பராக் உள்ளிட்ட இளம் வீரர்கள் பார்த்து வருகிறார்கள். அது அவர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினால், அது அவர்களின் அடுத்தகட்டநகர்வுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்றும் பயிற்சியாளர் சங்ககரா கூறினார்.

கடந்த மார்ச் 24ஆம் தேதி லக்னோ அணியுடன் நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய ரியான் பராக்,  29 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடதக்கது. அன்றைய போட்டியில் லக்னோவை 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது.

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

7 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

8 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

11 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

11 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

12 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

12 hours ago