இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர் தோனி.! ரவி சாஸ்திரி புகழாரம்.!

Published by
மணிகண்டன்

தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர். விளையாட்டில் சிறந்து விளங்கிய நபர்களில் ஒருவர் தோனி. – தோனி குறித்து பல்வேறு கருத்துக்களை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘ தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர். விளையாட்டில் சிறந்து விளங்கிய நபர்களில் ஒருவர் தோனி. ‘

‘ அவர் விதமான போட்டிகளிலும் கோப்பையை வென்றுள்ளார். டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் கோப்பைகள் என அனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்  தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. ‘

‘ தோனி தன்னை சிறந்த விக்கெட் கீப்பராகவும் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். அவர் ஸ்டம்பிங் செய்யும் வேகம் அபாரமானது. அவர் ஸ்டம்பிங் செய்து, பெயில்ஸை தட்டி விட்டது சில சமயம் பேட்ஸ்மேனுக்கு கூட தெரியாது. அந்தளவிற்கு தோனியின் ஸ்டம்பிங் வேகமானது.’

‘ஒரு பேட்ஸ்மேனாகவும் தன்னை ஓர் சிறந்த பினிஷராக உருவாக்கி கொண்டார் தோனி. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்களில் தோனி சிறப்பானவர்’ என  ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் தோனி பற்றிய நினைவுகள் குறித்து சிலாகித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

3 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

3 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

4 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

4 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

5 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

6 hours ago