#IPL2022: பந்துகளை “ஸ்கை”-யை நோக்கி பறக்கவிட்ட சூரியகுமார் யாதவ்.. 152 ரன்கள் இலக்கு!

Published by
Surya

ஐபிஎல் தொடரின் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். இதில் பெங்களூர் அணி, 152 ரன்கள் அடித்தால் வெற்றிபெறும்.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள்.

இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக அடிவர, 26 ரன்கள் அடித்து ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து ப்ரேவிஸ் களமிறங்க, 8 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்க, அவரையடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் அணியின் ஸ்கொர் 120-ஐ தாண்டுமா என்ற சூழல் உருவானது. அப்பொழுது சூரியகுமார் யாதவ் தனது அதிரடியாக ஆட்டத்தை காட்ட தொடங்கினார்.

18-வது ஓவரை முஹமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் சூரியகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அந்த ஓவரில் மட்டும் சூரியகுமார் யாதவ் 21 ரன்கள் அடித்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. தற்பொழுது 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.

Published by
Surya

Recent Posts

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

24 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

46 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago