கடந்த 11-ம் தேதி நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் 673 ரன்களை அடித்து இருந்தார். அதுவே இதுவரை ஒரு உலகக்கோப்பை தொடரில் அடித்த அதிகபட்ச ரன்னாக உள்ளது.
நடப்பு உலகக்கோப்பையில் லீக் போட்டியில் டேவிட் வார்னர் 638 ரன்கள் அடித்து இருந்தார். எனவே டேவிட் வார்னர் 35 ரன்கள் எடுத்து இருந்தால் சச்சின் சாதனையை முறியடித்து இருப்பார் ஆனால் அரையிறுதி போட்டியில் 9 ரன்கள் எடுத்து டேவிட் வார்னர் அவுட் ஆனார்.
ரோஹித் சர்மா நடப்பு உலகக்கோப்பையில் 647 ரன்கள் அடித்து இருந்தார். ஆனால் ரோஹித் சர்மா அரையிறுதி போட்டியில் 27 ரன்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் சர்மா 1 ரன்னில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
இதன் மூலம் நடப்பு உலக்கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருவருமே சச்சின் சாதனையை முறியடிக்காமல் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறினர்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…