ஐபிஎல் தொடரில் 33 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று பகல் – இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி துபாயில் நடைபெறவுள்ளது. இதில் புள்ளிப் பட்டியலில் 7 ஆம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டியாகும்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 8 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் பெங்களூர் அணி, தொடக்கத்தில் சொதப்பினாலும் அடுத்த நடந்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது. இந்த போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடர்களில் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 9 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. எஞ்சிய மூன்று போட்டிகள் சமனில் முடிந்தது. மேலும், இரு அணிகளும் தங்களின் ஆடும் XI-ல் மாற்றம் செய்ய வாய்ப்புகள் கம்மி. பெரும்பாலும் அதே வீரர்களை வைத்து விளையாடுவார்கள்.
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…