ஒரு பிட் காயினை பயன்படுத்தி இந்தியாவுக்கு ரூ.41 லட்சம் நிதியுதவி – பிரட் லீ அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி.

இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக பெரும் பேரழிவை சந்தித்து வருகிறது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும் நிலவுகிறது. பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இந்த நிலையில், பிஎம்கேர்ஸ் நிதிக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நிவாரண நிதிக்கு 50000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 37,36,590 ரூபாய்) பேட் கம்மின்ஸ் நிதி கொடுத்திருந்தார்.

இந்த நிதியை கொண்டு இந்திய மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுமாறு அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கம்மிங்க்ஸை தொடர்ந்து, இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ சுமார் ரூ.41 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவை இரண்டாவது தாய் நாடாக கருதுவதாகவும், நிதி உதவி அளித்த பேட் கம்மிங்ஸ்க்கு பாராட்டையும் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக க்ரிப்டோ கரன்சி, அதாவது, ஒரு பிட் காயினை விடுவித்து, இந்தியாவுக்கு மருத்துவ தேவையான ஆக்சிஜன் வாங்க ரூ.41 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 1 பிட்காயின் மதிப்பு சுமார் 40,95,991 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

7 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

7 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

8 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

8 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

11 hours ago