#SAvIND: முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இந்தியா!

Published by
பாலா கலியமூர்த்தி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது.

சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன் நடைபெற்று வரும் இப்போதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னின்னிஸில் இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 123, மயங்க் அகர்வால் 60 மற்றும் ரஹானே 48 ரன்கள் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கிடி 6, ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் முகமது ஷமி 5, பும்ரா, ஷர்துல் தாக்கூர் தலா 2 வீழ்த்தினர்.

பின்னர், தனது 2-வது இன்னிங்ஸை 130 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய நிலையில், இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக தென்னாபிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்காக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 305 ரன்கள் இலக்குடன் நேற்று மீதம் இருந்த நேரத்தில் தனது 2-வது இன்னிங்ஸை தென்னாபிரிக்கா அணி தொடங்கியது.

நேற்றைய ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா 94 ரன்னிற்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. இந்நிலையில், இன்றைய கடைசி நாளில் ஆட்டத்தில் இன்னும் 211 ரன்கள் அடித்தால் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி என்ற முனைப்புடன் களமிறங்கியது. ஆனால், இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாபிரிக்கா அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

இறுதியாக தென்னாபிரிக்கா அணி 68 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா அணியை பொறுத்தளவில் டீன் எல்கர் 71, தேம்பா பாவுமா* 35 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி தலா 3, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மேலும், செஞ்சுரியன் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் வெற்றியை இந்தியா பதிவு செய்தது. செஞ்சுரியனில் வரலாறு படைத்த இந்தியா – 2021-ஆம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

3 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

3 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

3 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

4 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

4 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

5 hours ago