இலங்கை சென்று விளையாடும் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அந்த அணியில் பும்ரா, ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், முகமது சிராஜ், ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் உள்ளிட்ட
முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை சென்று 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்:
ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, பட்டிக்கல், ருதுராஜ் , சூரியகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட்கீப்பர்), சாம்சன் (விக்கெட்கீப்பர்), சாஹல், ஆர். சஹார், கே கவுதம், குர்ணால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சகரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…