போராடிய பப்புவா நியூ கினி!! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!!

Published by
அகில் R

டி20I : டி20 உலகக்கோப்பையின் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பப்புவா நியூ கினி அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பப்புவா நியூ கினி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி விளையாடியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெரிதளவு  தடுமாறியது. அதனை தொடர்ந்து அந்த அணியின் சேசே பௌவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 43 பந்துகளை 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும், அந்த அணியில் வேறு எந்த வீரரும் சரிவர விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரஸ்ஸல் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். மேலும், 137 என்ற எளிய இலக்கை எடுப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்கினார்கள். அதன் படி முதல் பந்திலேயே தொடக்கவெரர் சார்லஸ் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

அதனை தொடர்ந்து நிக்கோலஸ் பூரனும், பிராண்டன் கிங் சற்று நிதனமாக விளையாடினார்கள் இருந்தாலும் பூரன் 27 ரன்களுக்கும், கிங் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் ருஸ்ஸலும் (15 ரன்கள்), ரோஸ்டன் சேஸ்ஸும் (42 ரன்கள்) நின்று விளையாடி 19 ஓவர்கள் முடிவில் வெற்றியை தேடி தந்தனர்.

பப்புவா நியூ கினி அணியும் தங்களது முழு ஈடுபாடையும் கொடுத்து போராடி தோல்வியடைந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த டி20 உலகக்கோப்பையில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Published by
அகில் R

Recent Posts

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

11 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago