ஐசிசி ஆடவர் உலகக்கோப்பையில் நடைபெறும் இந்த நேரத்தில் சமீபத்திய ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் தரவரிசையில் உலகின் நம்பர் பேட்ஸ்மேனாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாபர் அசாம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு முதலிடத்தை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் தட்டி பறித்தார். அதே சமயம், ஒருநாள் போட்டியின் நம்பர்-1 பந்துவீச்சாளராக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டுளளார்.
நம்பர்-1 பேட்ஸ்மேன் சுப்மன் கில்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட சமீபத்திய ஒருநாள் தரவரிசையில் சுப்மன் கில் நம்பர்-1 பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாபர் அசாம் கடந்த 951 நாட்கள் முதல் இடத்தில் இருந்தநிலையில் அவரை பின்னுக்கு தள்ளி சுப்மன் கில் உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். சுப்மன் கில் 830 ரேட்டிங் புள்ளிகளையும், பாபர் அசாம் 824 ரேட்டிங் புள்ளிகளையும் பெற்றுள்ளார். அதே நேரத்தில், விராட் கோலி 770 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 739 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களில் சிராஜ் நம்பர்-1:
ஒருநாள் பந்துவீச்சாளர்களில் முகமது சிராஜ் நம்பர்-1 ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிராஜ் 709 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் உலகக் கோப்பையில் அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில், முகமது ஷமி டாப்-10 ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்குள் வந்துள்ளார். ஷமி 635 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய ஷமி 4 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளும் அடங்கும். ஷமியைத் தவிர குல்தீப் யாதவ் நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.
நம்பர்-1 ஆன இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
சுப்மன் கில்லுக்கு முன், மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியயலில் நம்பர்-1இடத்தை பிடித்தார். அதே நேரத்தில், விராட் கோலி மற்றும் எம்.எஸ் தோனியும் இந்த சாதனைகளை படைத்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு ஷுப்மான் கில் வேகமாக ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நம்பர்-1 பேட்ஸ்மேன் ஆனார். தற்போது இந்திய அணி ஒருநாள் போட்டியிலும் நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…