சூப்பர் 8 சுற்றால் இந்திய அணிக்கு ஆப்பு தான்! இதுதான் காரணம் ..!!

Published by
அகில் R

டி20I: நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின், நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் விளையாடும் இந்திய அணி உட்பட பல அணிகளுக்கு பிரச்சனை நிலவும் சூழ்நிலை உள்ளது.

இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைதற்கு முன்பே சூப்பர் 8 சுற்றில் விளையாட  போகும் 8 அணிகள் யார் யார் என்று தெரிந்துவிட்டது. இந்த அணிகளை தற்போது 2 பிரிவுகளாக பிரித்து அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்று என்பது நடைபெற இருக்கிறது.

நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும், இரண்டாம் பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த சூப்பர் 8 சுற்றானது வருகிற ஜூன்-19 ம் தேதி தொடங்குகிறது, அதில் முதல் போட்டியாக அமெரிக்கா அணியும் தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளனர்.

தற்போது இந்த சூப்பர் 8 சுற்று பற்றிய ஒரு அப்டேட் கிடைத்துள்ளது, அது என்னவென்றால் இந்த சூப்பர் 8 சுற்றுகளில் நடைபெறும் போட்டிகள் அனைத்துமே வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள 4 மைதானங்களில் தான் நடைபெறும்.  இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்களில் தற்போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும், வருகிற 24ம் தேதி அன்று செயின்ட் லூசியாவில் நடைபெற இருக்கும் இந்திய-ஆஸ்திரேலியா அணிகள் விளையாட இருக்கும் போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒருவேளை மழையின் காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டால் இந்த 2 அணிகளுமே பெரிய அளவில் சிக்கலை சந்திப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஏற்கனவே லீக் போட்டிகளில் பல போட்டிகள் மழையின் காரணமாக போட்டிகளை ஐசிசி கைவிட்டது. அதுவே பெரிய சர்ச்சைகளுக்கு உள்ளானது. தற்போது, சூப்பர் 8 சுற்றிலும் இப்படி நடந்தால் பெரிய பெரிய அணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. சூப்பர் 8 சுற்றுகளிலும் மழையால் போட்டி கைவிட்டால் 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளிகளை வழங்குவார்கள்.

இதனால், புள்ளிப்பட்டியலிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்திய அணி லீக் போட்டியிலேயே ஒரு போட்டியை மழையின் காரணமாக தவறவிட்டனர் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் சூப்பர் 8 சுற்றில் அப்படி நடந்தால் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழக்க நேரிடலாம் என  இந்திய அணி ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

22 minutes ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

1 hour ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

3 hours ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

4 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

4 hours ago