தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர் தோனி தான். கேப்டனாக அவர் செய்த சாதனைகள் எந்த ஒரு வீரராலும் நிகழ்த்த முடியாதது. இந்த சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் பல ரசிகர்கள் வருந்தினர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த வருடம் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். இந்தநிலையில் இதுவரை சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிவிவரப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மேலும் அண்மையில் சென்னை அணி நிர்வாகம் 2021 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி கேப்டனாக தோனி இருப்பார் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், “சிஎஸ்கே நிர்வாகம் தோனிக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. அனைத்து விதமான மரியாதை மற்றும் சுதந்திரத்தை தோனி பெறுகிறார்.
இவர்களுக்கு இடையே நல்ல நட்பு மட்டும் நல்ல உறவுகள் உள்ளது. அடுத்த வருடம் தோனிதான் கேப்டனாக இருப்பார் என்று அறிவித்தது ஆச்சரியம் அளிப்பது ஒன்றும் இல்லை. தோனியால் விளையாட முடியும் வரை விளையாடுவார் மும்பை அணிக்கு பிறகு ஒரு நல்ல அணியை அவர் உருவாக்கியுள்ளார்.
அடுத்த வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியாக இருப்பார் என்று ஐபிஎல் நிறுவனம் அறிவித்தது இதனால் தோனியும் விசுவாசமாக இருக்கிறார். இந்த நிலையில் தோனி அவருடைய ஆன்மா, இதயம் தூக்கமில்லா இரவுகள் அனைத்தையும் கொடுக்கிறார். தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…