சந்திரகாந்த் பண்டிட் செய்த கேவலமான செயல் ..! போட்டு உடைத்த நாராயணன் ஜெகதீசன் !

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட் செய்த ஒரு கேவலமான செயலை போட்டு உடைத்த இளம் வீரர் நாராயண் ஜெகதீசன்.

கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திரிகாந்த் பண்டிட்டை பற்றி தமிழக இளம் வீரரான நாராயண் ஜெகதீசன் நேற்று முன்தினம் கொல்கத்தா, டெல்லி இடையேயான போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையில் சில அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து பேசி இருந்தார். சந்திரகாந்த் பண்டிட் ஒரு ஒழுக்க மற்ற முறையிலும், முட்டாள் தனமான அணுகுமுறையும் கொண்டவர் ஆவார்.

மேலும், இவர் கொல்கத்தா அணிக்காக இடம் பெற்றது முதல் அவரது பயிற்சி முறைகள் எல்லாமே பேசும் பொருளாகவே இருந்து உள்ளது. அவரது கவனங்கள் எல்லாமே உடைகளிலும், நடத்தையிலும் மட்டுமே இருக்கும் என்று சில வெளிநாட்டு கிரிக்கெட்  வீரர்கள் அவரது பயிற்சியில் ஈடுபட்ட போது கூறி இருந்தனர். அதே போல தமிழக வீரரான நாராயண் ஜெகதீசன் பல வருடங்கள் சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார்.

அதன் பிறகு அவரை கொல்கத்தா அணியின் நிர்வாகம் வாங்கியது. கடந்த 2 வருடங்கள் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருக்கும் அவர் சந்திரிகாந்த்தின் கீழ் பயிற்சியிலும் ஈடு பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா அணியின் பயிற்சி முகாமில் ஒருநாள் நடந்த சம்பவம் பற்றி ஜெகதீசன் பேசினார்.

அவர் பேசுகையில், ” சந்திரகாந்த் ஒரு மிலிட்டரி பயிச்சியாளர் ஆவர். அவரது ரூல்ஸ் மற்றும் பயிற்சி முறைகள் எல்லாமே எல்லாமே மிலிட்டரி வடிவில் இருக்கும். இதற்கு உதாரணமாக ஒரு நாள் அவர் எங்களிடம் ‘நாளை ஸ்லீவ்லெஸ் டே’ என்று அறிவித்தார். அதாவது அன்றைய பயிற்சி நாளில் ஸ்லீவ்லெஸ் அணிந்து தான் வர வேண்டும் என்று சந்திரகாந்த் கூறினார்.

அப்போது அதனை முற்றிலும் மறந்து எதிர்பாராத விதமாக வருண் சக்கரவர்த்தி முழு கை டி-ஷர்ட் (T-shirt) அணிந்து வந்தார். அப்போது அதனை பார்த்த சந்திரிகாந்த் கத்தரிக்கோலை எடுத்து அவரிடம் போய் அவரது இரண்டு டி-ஷர்ட்டில் உள்ள கைகளை வெட்டி எரிந்து விட்டார். அந்த நிகழ்வு வருணையும், என்னையும் மிகவும் பாதித்தது”, என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையின் போது கூறினார்.

Recent Posts

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

27 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

31 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

43 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

2 hours ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago