இங்கிலாந்து – நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது..!

Published by
murugan
  • இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  டிராவில் முடிந்தது.
  • இரு அணிகளுக்கும் இடையே 2-வது மற்றும் கடைசி  போட்டி வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 378 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெவென் கான்வே 200 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை  தொடங்கிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 275 ரன்கள் எடுத்தது.

இதனால், 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை நியூசிலாந்து தொடங்கியது. 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்தபோது நியூசிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தனர். 273 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

5-வது நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழந்து 170 ரன்கள் எடுத்து களத்தில் ராய் பர்ன்ஸ் 60, போப் 20 ரன்களுடன் இருந்தனர். இதனால், முதல் டெஸ்ட் போட்டி  டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையே 2-வது மற்றும் கடைசி  போட்டி வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

Published by
murugan
Tags: ENG vs NZ

Recent Posts

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…

23 minutes ago

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி நாளை அறிமுகம் – என்.ஆனந்த் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…

37 minutes ago

“மன்மோகன் சிங்கிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள்” – திமுக எம்.பி. கனிமொழி.!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…

54 minutes ago

காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்.., யார் பொறுப்பு? அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…

1 hour ago

தமிழன் கங்கையை வெல்வான் – மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…

2 hours ago

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

3 hours ago