இந்திய அணிக்கு அந்த பாகிஸ்தான் வீரர் தான் சவாலாக இருப்பார் – டாம் மூடி!

Published by
பால முருகன்

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நாளை தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகிறது. அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர்  2-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணியும் – இந்திய கிரிக்கெட் அணியும் மோதவுள்ளது. அந்த போட்டியை காண தான் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட  இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், ஆஸ்ரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பாகிஸ்தான் அணியின் வேக பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடியின் பந்து வீச்சு சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஷஹீன் அப்ரிடியின் பந்துவீச்சு சவால்

இது குறித்து பேசிய டாம் மூடி ” ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சற்று திணற வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன். அவர் வீசும் ஃபுல் ஸ்டாப் பந்தில் பல விக்கெட்கள் விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். நடைபெறவுள்ள போட்டியில் மட்டுமில்லை இதற்கு முன்பாகவும் அதை அவர் வரலாற்று ரீதியாக செய்துள்ளார்.

ஒரு வேலை ஷாஹீன் அப்ரிடி முதல் 5 ஓவர்களில் பந்து வீச வந்தால் இந்திய அணியின் ஆரம்ப ஜோடி விக்கெட்டுகளை அவர் எடுத்துவிடுவார். அதைப்போல, விக்கெட்கள் விழுந்தால் இந்திய அணி மிடில் ஆர்டர் மீண்டும் ரன்களை அடிக்கவேண்டும்.

ஆஷஸை மிஞ்சும்

இந்தப் ஆசிய 2023 கிரிக்கெட் போட்டி ஆஷஸை மிஞ்சும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், 2-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. எனவே, இதற்கு எப்போதும் ஒரு அழகான கதை உண்டு, இரண்டுமே சிறந்த கிரிக்கெட் நாடுகள். அதாவது நான் இந்தியா – பாகிஸ்தான் அணியை சொல்கிறேன். இந்திய அணியை போலவே, பாகிஸ்தான் அணியைப் பார்க்கும்போது, அதிலும் பல வீரர்கள் தங்களுடைய திறமைகளை அழகாக காமிக்கிறார்கள்.

அச்சுறுத்தலாக உள்ளனர்

பாகிஸ்தான் அணி இப்போது அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் கலவையைக் சிறப்பாக கொண்டுள்ளனர், அவர்கள் ஒரு உண்மையான அச்சுறுத்தலாக தற்போது மற்ற அணிகளுக்கு இருக்கிறார்கள். குறிப்பாக பாபர் அசாம் போன்றவர்கள் மீது வைக்கும் சுவாரசியமான வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என நான் நினைக்கிறேன் ‘ எனவும் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago