இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு முன் கேப்டன் விராட் கோலியும் , பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரோஹித் சர்மாவுடன் பிரச்சனை இருப்பதாக வெளியான தகவல் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விராட் கோலி , நீங்கள் சொல்வதை நானும் கேள்விப்பட்டேன். ஒரு அணியின் வெற்றிக்கு ஓய்வறையில் நடக்கும் விஷயம் முக்கியமானது. இந்த செய்தி உண்மையாக இருந்திருந்தால் நாங்கள் நன்றாக விளையாடி இருக்க முடியாது.
ஒரு நபரை பிடிக்க வில்லை என்றால் அவரிடம் நான் எப்படி நடந்து கொள்வேன் என்பது முகத்தில் நீங்கள் பார்க்கலாம். எப்போதும் ரோஹித் சர்மாவை பாராட்டி தான் வருகிறேன். எங்களுக்கும் இந்த பிரச்சினை இல்லை என கூறினார்.
மேலும் இதனால் யார் பயன் அடைகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என கூறினார். இந்நிலையில் மியாமை நோக்கி நேற்று இந்திய அணி புறப்பட்டனர். அதற்கு முன் இந்திய வீரர்களுடன் கேப்டன் கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.ஆனால் அந்த புகைப்படத்தில் ரோகித் சர்மா இல்லை.உங்களுக்குள் பிரச்சனை இல்லை என்றால் ரோகித் சர்மா எங்கே ? ரோகித் சர்மா உடன் பிரச்சனை இருப்பது உண்மைதான் அதனால் தான் ரோஹித் சர்மா புகைப்படத்தில் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…