ஐபிஎல் 2024 : விக்கெட்டால் நடந்த விபரீதம் ..! சிஎஸ்கே ரசிகரை அடித்தே கொன்ற ரோஹித் ரசிகர்கள் ..!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை கேலி செய்ததால் மும்பை ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அந்த சிஎஸ்கே ரசிகர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

கடந்த 27ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியான 8-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடி 277 என்ற இமாலய ரன்களை குவித்தது. இந்த போட்டியை மகாராஷ்டிராவில் கோலப்பூரில் உள்ள ஹன்மந்த்வாடி பகுதியில், ஐபிஎல் ரசிகர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து பார்த்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து 278 என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அப்போது மும்பை அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா நன்றாக விளையாடி கொண்டிருக்கையில் திடீரென 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 63 வயதான பந்தோபந்த் பாப்சோ திபிலே என்ற சிஎஸ்கே ரசிகர் ஒருவர், ரோகித் சர்மா அவுட் ஆகிவிட்டார், இனி மும்பை அணி எப்படி இந்த இமாலய இலக்கை எட்டும் என கேலியாக பேசியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ரோஹித் ரசிகர்கள் 2 பேர் பாப்சோ திபிலேவை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த தாக்குதலில் பாப்சோ திபிலே தலையில் வலுவான காயம் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சிஎஸ்கே ரசிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ரோஹித் ரசிகர்களான, 50 வயதான பல்வந்த் மகாதேவ் ஜான்ஜே மற்றும் 35 வயதான சாகர் சதாசிவ் ஜான்ஜே ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், ஒரு விக்கெட்டால் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் விசாரணையில், ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை அணி படைத்ததால், மகாதேவ் மற்றும் சாகர் சதாசிவ் ஆகியோர் ஏற்கனவே கோபத்தில் இருந்து இருக்கின்றனர். இந்நிலையில், பாப்சோ திபிலே கேலி செய்ததால் ஆத்திரமடைந்த இருவரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

6 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

6 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

7 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

7 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

8 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

8 hours ago