“இதுக்காக தான் ரோஹித் விக்கெட்டை நான் கொண்டாடவில்லை”…மனம் திறந்த முகமது சிராஜ்!
முகமது சிராஜ், ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஏன் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை எப்படி கொண்டருவார் என்று சொல்லியே தெரியவேண்டாம். மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அப்படி பட்ட சிராஜ் இந்த சீசன் மும்பைக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விக்கெட்டை எடுத்தபிறகு அவர் கொண்டாடவே இல்லை.
மும்பை அணிக்கு எதிராக கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது மும்பை வீரர் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எப்படி எடுக்கலாம் என கில் யோசித்துக்கொண்டு சிராஜுக்கு வாய்ப்பு கொடுத்தார். சிராஜும் தன்னுடைய அற்புதமான பந்துவீச்சில் ரோஹித் ஷர்மாவை போல்ட் ஆக்கினார். இவ்வளவு பெரிய விக்கெட்டை எடுத்தபிறகு அவர் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கொண்டாடவில்லை.
அப்போதே அவர் செய்த இந்த செயலின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி ரோஹித் மீது உள்ள மரியாதையின் காரணமாக அவர் கொண்டாடவில்லை என நெட்டிசன்கள் பலரும் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் மீண்டும் குஜராத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவிருக்கிறார்கள்.
இந்த போட்டிக்கு முன்பு நடந்த பேட்டியில் சிராஜ் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். உதாரணாமாக அந்த போட்டியில் ரோஹித் விக்கெட் எடுத்தபிறகு எதற்கு கொண்டாடவில்லை என்கிற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “நான் அந்த போட்டியில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை எடுத்த பிறகு கொண்டாடததற்கு பல காரணங்கள் உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ரோஹித் ஷர்மா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் எங்களை போல ஒரு வீரர்களுக்கு முன் உதாரணமாக விளையாடிக்கொண்டு இருக்கிறார்.
அவரை போல ஒரு பெரிய வீரருடைய விக்கெட்டை நான் எடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தாலும்,அவர் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு காரணமாக நான் விக்கெட்டை கொண்டாடவில்லை. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன், இது எனது மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக நான் கொண்டாடவில்லை.” எனவும் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.