மூத்த வீரர்களுக்கு ஓய்வு கிடைக்குமா..?இன்று இந்தியா -நெதர்லாந்து மோதல்..!

Published by
murugan

2023 ஒருநாள் உலகக் கோப்பையில், இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்து முதலிடத்தில் உள்ளது.  தனது கடைசி லீக் போட்டியை  நெதர்லாந்துக்கு எதிராக இன்று இந்திய அணி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகிறது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால், இந்த கடைசி போட்டியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், இந்த போட்டிக்கு முன்பு தங்களுக்கு நிறைய ஓய்வு கிடைத்துள்ளது. அரையிறுதிக்கு முன் பயிற்சிக்கு இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். இந்திய அணிக்கு 6 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தனது கடைசி போட்டியில் விளையாடியது. எனவே, அனைத்து வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் விளையாட தயாராக உள்ளனர்.

இந்த ஓய்வு மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் நமக்கு உதவும். அரையிறுதிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என கூறினார். நெதர்லாந்துக்கு எதிராக சீனியர் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இதற்கு காரணம் பும்ரா காயத்தில் இருந்து திரும்பி வந்து தற்போது வரை தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவது தான்.

அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு ஓய்வு கொடுக்க முடியும். அதேசமயம் இந்த போட்டியில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது.

Published by
murugan

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

35 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

51 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago