39 ரன்களுக்கு சுருண்ட உகண்டா ..! 134 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் பிரம்மாண்ட வெற்றி!

Published by
அகில் R

டி20I : டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று காலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி உகாண்டா அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 18-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், உகண்டா அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியே விளையாடியது. இதனால், உகாண்டா அணியின் பந்து வீச்சும் அந்த அணிக்கு சரிவர கைகொடுக்கவில்லை. சார்லஸ் 44 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 22 ரன்கள், ரஸ்ஸல் 30 ரன்கள், ரோவ்மன் பவல் 23 ரன்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினார்கள்.

அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 174 என்ற இமாலய இலக்கை அடைவதற்கு பேட்டிங் செய்ய களமிறங்கியது உகாண்டா அணி. உகாண்டா அணிக்கு எதிர்பாராத தொடக்கமும் கிடைக்கவில்லை, உறுதுணையாக பொறுப்புடன் விளையாட ஒரு பேட்ஸ்மேனும் கிடைக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்து வீச்சால் அதிலும் குறிப்பாக அகேல் ஹொசின் சிறப்பாக பந்து வீசினர். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும், உகாண்டா அணியில் எந்த ஒரு வீரரும் சரிவர விளையாடாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால், 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. மேலும், இது வரலாற்று வெற்றியாகவும் டி20 உலகக்கோப்பையில் கருதப்படுகிறது.

Published by
அகில் R

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

58 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago