நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த ம்சோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் போராட்டம் நடந்ததால் அங்கு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த போராட்டத்தின் எதிரொலியாக ரஞ்சி கிரிக்கெட் மற்றும் ஐ.எஸ்.எல் கால்பந்து மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்களுக்கான உள்ளூர் ஆட்டங்கலும் பாதிக்கப்பட்டன. தற்போது அங்கு அமைதி திரும்பி விட்டது.
இந்நிலையில் தான் இந்தியா – இலங்கை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.இந்த சந்திப்பில் கோலியிடம் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இந்த கேள்விக்கு பதிலளித்த கோலி சிஏஏ விவகாரத்தில் நான் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை.ஏனென்றால் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துக்களை சொல்ல விரும்பினால் அந்த விஷ்யம் குறித்து சாதகம் மற்றும் பாதகங்களை தெரிந்து இருக்க வேண்டும். மேலும் சிஏஏ அப்படி என்றால் என்ன என்பது குறித்து எனக்கு முழு புரிதல் வேண்டும். அவ்வாறான புரிதல் இருந்தால் மட்டுமே என்னால் கருத்துக்களை கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…