Kevin Peterson about VK [file image]
சென்னை : விராட் கோலி கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கெவின் பீட்டர்சன் ஸ்டார்ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
கடந்த மே-22ம் தேதி அன்று ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. ஐபிஎல் தொடரில் 17 முறை ஒரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முயற்சி செய்து 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தும் வெளியேறியுள்ளது. மேலும், 2 முறை இறுதி போட்டிக்கு வந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் தோல்வியடைந்துள்ளது.
அதிலும் பெங்களூரு அணியில் விராட் கோலி தனது அணிக்காக ஒவ்வொரூ முறையும், ஒவ்வொரு போட்டியிலும் முழு ஈடுபாடுடன் விளையாடுவார். ஆனாலும், அந்த அணிக்கும் ஐபிஎல் கோப்பைக்கும் ராசி இல்லாமலே இருந்து வருகிறது. தற்போது இதை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான் கெவின் பீட்டர்சன் நேற்றைய எலிமினேட்டர் போட்டியின் போது பேசி இருந்தார்.
அவர் இதனை பற்றி கூறுகையில், “நான் முன்பே சொன்னேன், மீண்டும் சொல்கிறேன் மற்ற விளையாட்டுகளில் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் பெருமை தேடுவதற்காக அணிகளை விட்டு வெளியேறுவார்கள். இங்கு விராட் கோலி கடினமாக முயற்சி செய்து ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார், அவர் இவ்வாறு செய்தும் ஆர்சிபி அணி மீண்டும் தோல்வியுற்றது. அவர் அணியில் இருந்து வெளியேறி வேறு அணியில் சென்று விளையாடலாம்.
உண்மையில் அது டெல்லி அணியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விராட் செல்ல வேண்டிய இடம் டெல்லி தான். அவருக்கு டெல்லியில் ஒரு வீடு உள்ளது என்பது எனக்குத் தெரியும். அங்கு அவருக்கு ஒரு இளம் குடும்பம் உள்ளது. அவர் டெல்லியில் அதிக நேரம் செலவிடுகிறார், அவர் டெல்லியில் பிறந்தவர் ..அவர் ஏன் டெல்லிக்கு செல்ல முடியாது?
விராட் நீண்ட நேரம் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். கால்பந்தில் நீங்கள் பாருங்கள் பெக்காம் அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு சென்றார், ரொனால்டோ வெளியேறி வேறு அணிக்கு சென்றார், மெஸ்ஸி வெளியேறி வேறு அணிக்கு சென்றார் அதே போல டெல்லி அணிக்கு கோலி செல்ல வேண்டும்”, என்று பீட்டர்சன் நேற்றைய ஐபிஎல் போட்டியின் ஸ்டார்ஸ்போர்ட்ஸில் கூறி இருந்தார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…