விராட்கோலி இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 6 போட்டிகள் விளையாடி 223 ரன்கள் அடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கூட மிகவும் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் குவித்தார்.
மேலும் இந்த வருடம் அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார். இதுவரை மொத்தமாக 183 போட்டிகள் விளையாடி 5635 ரன்கள் அடித்து ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையும் வைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பெங்களூர் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 3 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி 197 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…