என்னடா இது மேட்சு? 19 பந்தில் போட்டியை முடித்த இங்கிலாந்து!!

Published by
அகில் R

டி20I: டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதிய சாதனையாக, இங்கிலாந்து அணி 19 பந்துகளில் ஒரு போட்டியை வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய மற்றொரு போட்டியாக தொடரின் 28-வது போட்டியாக இங்கிலாந்து அணியும், ஓமான் அணியும் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஓமான் அணி மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது. கிரிக்கெட்டில் நடந்து முடிந்த போட்டிகளின் ஹைலைட்ஸ் பார்ப்பது போல ஓமான் அணியின் பேட்டிங் அமைந்திருந்தது. அந்த அளவிற்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது ஓமான் அணி.

இதன் மூலம் 13.2 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது ஓமான் அணி. இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும், அடல் ரஷீத் 4 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்த எளிய ஸ்கோரை முடிந்த அளவிற்கு வேகமாக அடிக்க வேண்டுமென தொடக்கத்தில் இருந்து எல்லா பந்துகளையும் பவுண்டரிகள் அடிக்க முயற்சித்தனர். அதிலும் ஜோஸ் பட்லர் 8 பந்துக்கு 24 ரன்கள் நடித்திருந்தார்.

வெறும் 3.1 ஓவர்களில் அதாவது வெறும் 19 பந்துகளிலேயே 2 விக்கெட்டை இழந்து 50 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில்  போட்டியில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதோடு, இந்த போட்டியை பயன்படுத்தி புள்ளிபட்டியலில் ரன் ரேட்டை உயர்த்தியுள்ளனர்.

இதனால் இங்கிலாந்து அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்று ஸ்காட்லாந்து அணி அடுத்த போட்டியில் தோல்வி பெற்றால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில்,  வெறும் 20 பந்துகளுக்குள் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

Published by
அகில் R

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

52 seconds ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago