BCCI [file image]
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணி அனைவரும் எதிர்ப்பார்க்கபட்டது போல இருந்தாலும் ஒரு சில மாற்றங்களை விமர்சித்து ரசிகர்கள் இணையத்தில் பிசிசிஐயிடமே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியில் ஸுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். இவர் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 146.79 ஸ்ட்ரைக் ரேட்டில் 298 ரன்கள் எடுத்து அதிலும் 42.57 சராசரியில் விளையாடி வருகிறார். ஆனால் ருதுராஜ் 9 போட்டிகளில் விளையாடி 149.9 ஸ்ட்ரைக் ரேட்டில் 447 ரன்களை எடுத்து 63.85 சராசரியில் விளையாடி வருகிறார்.
இதனை கருத்தில் கொண்டு கில்லை ஏன் இந்திய அணியில் எடுக்க வேண்டும்? என்றும் ருதுராஜை ஏன் அணியில் எடுக்கவில்லை ?என்றும் பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான எகனாமியில் பந்து வீசிய நடராஜன் இடம்பெறவில்லை ஆனால் அவருக்கு பதிலாக அர்ஷதீப் சிங் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதே நேரம் முகமது சிராஜ் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக பந்து வீச வில்லை ஆனால் அவரை அணியில் எடுத்துள்ளனர் ஆனால் அவருக்கு பதிலாக சந்தீப் ஷர்மாவை அணியில் எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மேலும், குறிப்பாக நன்றாக விளையாடி வரும் ருதுராஜை எடுக்காததான் காரணத்தை விலகுமாறு பிசிசிஐக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…